இறுதி சடங்கில் தகராறு - நாட்டு வெடிகுண்டு வீசி லாரி ஓட்டுநர் கொலை.!! - Seithipunal
Seithipunal


இறுதி சடங்கில் தகராறு - நாட்​டு வெடிகுண்டு வீசி லாரி ஓட்டுநர் கொலை.!!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள முதலியார்பேட்டை, சிமென்ட் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் ராஜ்.  இவருடைய உறவினர் ஒருவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவருடைய இறுதி ஊர்வலம் நேற்று நடைபெற்ற நிலையில் அதில் கலந்து கொள்வதற்காக ராஜி சென்றிருந்தார். 

அப்போது அங்கு இறந்துபோனவர் உடலை தேங்காய் திட்டு பகுதியில் அடக்கம் செய்ய வேண்டும் என்று ஒரு சிலரும், சொந்த ஊரான தென்னஞ்சாலை பகுதியில் தான் அடக்கம் வேண்டும் என்று மற்றொரு குழுவினரும் சண்டையிட்டுள்ளனர். 

அதில் ராஜியும் தென்னஞ்சாலை பகுதியில் தான் அடக்கம் செய்ய வேண்டும் என்று கடுமையாக வாக்குவாதம் செய்துள்ளார். ஒருவழியாக ராஜி உறவினர் உடலை  அடக்கம் செய்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். இதையடுத்து ராஜி நேற்று இரவு தனது வீட்டிற்கு அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டு திரும்பி வந்துக் கொண்டிருந்தார். 

அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த இரண்டு பேர் தங்கள் கையில் இருந்த நாட்டு வெடிகுண்டை ராஜி மீது வீசியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ராஜி அந்த சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lorry driver kill throw country bomb in puthuchery


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->