மகாராஷ்டிரா | வெடி மருந்து தொழிற்சாலை தீ விபத்து! உடல் கருகி உயிரிழந்த பரிதாபம்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா, நாக்பூரில் உள்ள வெடி மருந்து தொழிற்சாலையில் இன்று பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் பெண்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த விட்டனர். மேலும் 3 பேர் பலத்த காயங்களுடன் மீட்கபட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மகாராஷ்டிரா, நாக்பூரில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் செயல்பட்டு வந்த வெடி மருந்து தொழிற்சாலையில் இன்று பிற்பகல் 1 மணி அளவில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. 

இந்த விபத்தில் தொழிற்சாலையில் இருந்த தொழிலாளர்கள் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் பலத்த காயமடைந்த 9 பேர் அருகில் உள்ள வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை வைத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Maharashtra Explosives factory fire 


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->