பிறந்த குழந்தையை உயிருடன் புதைத்த தந்தை - விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்.1 - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் நாட்டில் உள்ள சிந்து மாகாணத்தின் நவுசாகர் பெரோஸ் நகரத்தில் வாழ்ந்து வந்தவர் தாயாப். இவருடைய மனைவிக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த நிலையில் குழந்தையின் ஆரோக்கியத்தில் பின்னடைவு ஏற்பட்டதால், சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் மிகுந்த ஏழ்மையில் வாழ்ந்து வந்த தாயாபிடம் குழந்தையின் மருத்துவ செலவுக்கு தேவையான பணம் இல்லை. இதனால், தாயாப் பச்சிளம் குழந்தையை உயிருடன் மண்ணில் குழிதோண்டி புதைத்துள்ளார். 

இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் படி போலீசார் விரைந்து வந்து தந்தை தாயாபை கைது செய்துள்ளனர். அவரிடம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில், மருத்துவ செலவுக்கு பணம் இல்லத்ததால் குழந்தையை புதைத்தாக தாயாப் வாக்குமூலம் அளித்துள்ளார். 

இதையடுத்து போலீசார் புதைக்கப்பட்ட குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for buried baby in pakisthan


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->