டெல்லியில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - ஒருவர் கைது..!! - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லியில் போலீசாருக்கு போதைப்பொருள் கடத்தல் குறித்து ரகசிய தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில் கபீர் நகரில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சந்தேகப்படும் வகையில் கார் ஒன்று அந்த சாலையில் வந்துகொண்டிருந்தது. அதனை மடக்கிய போலீசார் அந்தக் காரில் சோதனை செய்தனர். அப்போது, காரில் இருந்து கருப்பு பாலிதீன் பையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதன் பின்னர் போலீசார் இதனை கடத்தி வந்த உஸ்மான்பூரைச் சேர்ந்த இம்ரான் என்பவரை கைது செய்தனர். அவர் மீது ஏற்கனவே 10 குற்ற வழக்குகள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

man arrested for drugs seized in delhi


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->