லோன் வாங்கி தருவதாக மோசடி - போலீசாரின் விசாரணையில் அடுத்தடுத்து வந்த அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தென்னம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினசாமி. இவரிடம் கடந்த ஆண்டு மே மாதம், வேலப்ப கவுண்டன்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவர் 2 கோடி ரூபாய் லோன் வாங்கி தருவதாக கூறி, நில ஆவணம் மற்றும் ரூ.10.75 லட்சம் ரூபாய் ரொக்கம் பெற்றார். ஆனால் கூறியபடி லோன் பெற்று தராமல் காலம் தாழ்த்தி வந்தார்.

இதையடுத்து ரத்தினசாமி, சிவகுமார் அலுவலகத்தை தொடர்பு கொண்ட போது முறையாக பதில் அளிக்கப்படவில்லை. பின்னர் சிவகுமார் தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில், அவர் பலரிடம் லோன் வாங்கி தருவதாக கூறி, நிலத்தின் ஆவணம் மற்றும் குறிப்பிட்ட தொகையை பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ரத்தினசாமி திருப்பூர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் படி போலீசார் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து தென்காசியில் தலைமறைவாக இருந்த அவரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், சிவக்குமார் மீது பல மோசடி வழக்குகள் உள்ளதனால் அவரை அடுத்தடுத்து வழக்குகளில் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for money fraud in tirupur palladam


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->