மோடி மீண்டும் முதல்வர் ஆவார் ; ஏனென்றால், அவர் மீண்டும் பிரதமர் ஆக போவதில்லை - தேஜஸ்வி யாதவ்!! - Seithipunal
Seithipunal


மோடி மீண்டும் முதல்வர் ஆவார் என்று நிதீஷ் குமார் கூறியது சரிதான். ஏனென்றால் அவர் மீண்டும் பிரதமராக போவதில்லை என ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறிவுள்ளார்.

 மக்களவை தேர்தல் இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில், ஆறாம் கட்ட மக்களவைத் தேர்தல் நிறைவடைந்து ஏழாம் கட்டம் மக்களவைத் தளுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகியுள்ளது. இறுதிக்கட்ட மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தீவிரம் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

 சமீபத்தில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பிரச்சாரக் கூட்டத்தில் மக்கள் இடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது, பிரதமர் மோடி மீண்டும் முதல்வர் ஆவார் என்று பேசியது பெரும் சர்ச்சையாகியது.

 அது குறித்து பேசிய ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ், மோடி மீண்டும் முதல்வர் ஆவார் என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கூறியது சரிதான். ஏனென்றால் மீண்டும் மோடி பிரதமராக போவதில்லை. நிதீஷ் குமார் தனது மனதில் இருந்ததை தான் சொல்லி இருக்கிறார். அவர் மனதுக்குள் பாஜகவை அகற்ற விரும்புவதை நாங்கள் அறிவோம் என்று கூறிவுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Modi is CM again Because not PM again Tejashwi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->