கணவரின் கள்ளக்காதலால் விபரீதம்.! 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் கணவரின் கள்ளத்தொடர்பால் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் மாநிலம் மண்டியா மாவட்டம் ஹலேபேடி பகுதியை சேர்ந்தவர் அகில் அகமது. இவரது மனைவி உஸ்னா கவுசர்(30). இவர்களுக்கு மகன் ஹரீஸ் (7), மகள்கள் அலிஷா (4), அனம் பாத்திமா(2) என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர். 

இந்நிலையில் அகில் அகமது இராம நகர் மாவட்டத்தின் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். அப்பொழுது இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறி, அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

இதையடுத்து அகமதுவின் செல்போனை மனைவி உஸ்னா கவுசர் பார்த்தபோது அதில் கணவர் வேறு ஒரு பெண்ணுடன் நிர்வாணமாக இருந்த படங்கள் இருந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து அகில் அகமதுவிடன் கேட்டுள்ளார். மேலும் அந்தப் பெண்ணுடனான கள்ளத்தொடர்பை கைவிடும்படியும் கூறியுள்ளார்.

ஆனால் கள்ளக்காதலை கணவர் கைவிட மறுத்ததால் இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் மீண்டும் இவர்களிடையே தகராறு ஏற்பட்ட நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த உஸ்னா கவுசர், நேற்று காலை உணவில் விஷம் கலந்து தனது மூன்று குழந்தைகளுக்கும் கொடுத்துள்ளார்.

பின்பு அவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார். இதை அடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் நான்கு பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமுறைவாகியுள்ள அகில் முகமது மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mother commits suicide by poisoning 3 children in Karnataka


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->