உ.பியில் போட்டி போட்டு கொண்டு சென்ற இரண்டு கார்கள்.! மரத்தில் மோதியதில் 6 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள சித்ரகூட் மாவட்டம் ராஜாப்பூர் நகரில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிலர் திருமணம் முடிந்ததும் கார்களில் திரும்பி கொண்டு இருந்தனர். 

இவர்களில் பைலானி நகரில் உள்ள நிவாயிச் கிராம மக்கள் வந்த இரண்டு கார்கள் ஒன்றுடன் ஒன்று முந்தி செல்வதில் போட்டி ஏற்பட்டு உள்ளது. அதன் படி, இந்த கார்கள் மிர்கானி கிராமம் அருகே வந்தபோது, திடீரென மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே, ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஆறு பேர் காயம் அடைந்துள்ளனர். இதைப்பார்த்த பொதுமக்கள் சம்பவம் தொடர்பாக போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அங்கு அவர்கள் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காகவும், உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காகவும் அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near uttar pradesh six peoples died for car accident


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->