ஆந்திரா : எண்ணெய் ஆலையில் டேங்க்கை சுத்தம் செய்த 7 பேர் மூச்சுத்திணறி பலி.!
Oil tank cleaning workers 7 peoples death in Andhra Pradesh
ஆந்திர மாநிலம் எண்ணெய் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள பெத்தபுரம் மண்டலம் ஜி.ராகம்பேட்டையில் அம்பட்டி சுப்பண்ணா எண்ணெய் தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்துள்ளது.
இந்த நிலையில் எண்ணெய் டேங்க்கரை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்துள்ளனர். மேலும் சில தொழிலாளர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றுள்ளனர்.
இந்த விபத்தில் 7 தொழிலாளர்கள் மூச்சு திணறி உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
English Summary
Oil tank cleaning workers 7 peoples death in Andhra Pradesh