சொத்துக்களை ராகுல் காந்திக்கு உயில் எழுதி வைத்த மூதாட்டி.! - Seithipunal
Seithipunal


உத்தரகாண்ட் மாநிலத்தில் 78 வயது மூதாட்டி ஒருவர் தனது சொத்துகளை ராகுல் காந்தியின் பெயருக்கு உயில் எழுதி வைத்துள்ளார்.

புஷ்பா முன்ஜியால் என்ற 78 வயது மூதாட்டி உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் சேர்ந்தவர். முன்னாள் அரசுப் பள்ளி ஆசிரியையான இவர் தனது 50 லட்ச ரூபாய் மதிப்பிலான அனைத்து சொத்துகள் மற்றும் 100 கிராம் தங்கம் உள்ளிட்டவைகளை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் பெயருக்கு உயில் எழுதி வைத்துள்ளார்.

டேராடூன் நீதிமன்றத்தில் தனது சொத்துகளின் உரிமையை ராகுல் காந்திக்கு அளித்து உயிலை புஷ்பா முன்ஜியால் தாக்கல் செய்துள்ளார்.

தான், ராகுல் காந்தியின் எண்ணங்களால் ஈர்க்கப்பட்டதாகவும், அதனால்தான் தனது சொத்துகளை அவருக்கு வழங்குவதாகவும், ராகுல் காந்தியும், அவரது யோசனைகளும் நாட்டுக்கு அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து தற்போது வரை நாட்டின் முன்னேற்றத்திற்காக ராகுல்காந்தியின் குடும்பம் பல தியாகங்களை செய்துள்ளதாகவும் புஷ்பா முன்ஜியால் தெரிவித்தார்.

உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் பிரீத்தம் சிங்கை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்த புஷ்பா முன்ஜியால், ராகுல் காந்தியின் பெயருக்கு எழுதிய தனது உயிலை வழங்கினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Old lady property Ragul Gandhi


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->