ராகுல்காந்திக்கு நீதிமன்றம் செக்! அவதூறு வழக்கில் நாளை ராகுல் ஆஜர்! - Seithipunal
Seithipunal


அவதூறு வழக்கில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாளை நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவரான அமித்ஷா குறித்து குறித்து ராகுல்காந்தி பேசியது பெரும் சர்ச்சையானது. ராகுல்காந்தியின் பேச்சுக்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக ராகுல்காந்தி மீது புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரை பாஜக பிரமுகர் விஜய் மிஸ்ரா என்பவர் உத்தர பிரதேசம் மாநிலம் சுல்தான்பூரில்  உள்ள எம்.பி எம்.எல்.ஏ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு கடந்த பிப்ரவரி இருபதாம் தேதி நீதிமன்றத்தில் ஜாமின் வழங்கியது.

இந்த நிலையில் இந்த வழக்கில் வழக்கு மூலம் பதிவு செய்வதற்காக அவருக்கு நீதிமன்றம் எதிர்க்கட்சி தலைவர்  ராகுல்காந்திக்கு சம்மன் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதனைத் தொடர்ந்து அவதூறு வழக்கு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாளை ஆஜராக உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக ராகுல் காந்தி நாளை காலை 9 மணிக்கு லக்னோ விமான நிலையம் வந்து அங்கிருந்து நேராக சுல்தான்பூரில் உள்ள  நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Opposition leader Rahul Gandhi to appear in court tomorrow in defamation case


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->