பாராளுமன்ற தேர்தலில் பொது வேட்பாளர்கள் நிறுத்தம் - முடிவை வெளியிட்ட இந்தியா கூட்டணி! - Seithipunal
Seithipunal


பாரதிய ஜனதா கட்சியை பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடைய வைப்பதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட 28 காட்சிகள் இணைந்து 'INDIA' என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளது. 

இந்த கூட்டணியின் முதலாவது ஆலோசனை கூட்டம் பாட்னாவிலும், இரண்டாவது கூட்டம் பெங்களூரிலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பையில் மூன்றாவது கூட்டமும் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். 

நேற்று நடந்த கூட்டத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் வருகின்ற தேர்தலை சந்திக்கும் முறைகள் குறித்து கருத்துக்களை தெரிவித்தனர். 

பாரதிய ஜனதா கட்சி ஆளும் கட்சியாக அல்லது முக்கிய எதிர் கட்சியாக இருக்கும் மாநிலங்களில் 'INDIA' முன்னணி பொது வேட்பாளரை நிறுத்தும். 

அதன்படி 440 இடங்களில் பாரதிய ஜனதாவிற்கு எதிராக பொது வேட்பாளர்கள் நிறுத்தப்படுகிறார்கள். பஞ்சாப் மற்றும் கேரள மாநிலங்களில் பொது வேட்பாளர்கள் யாரும் நிறுத்தப்பட மாட்டார்கள். 

வேட்பாளர்கள் எண்ணிக்கை குறித்து அடுத்த மாதம் இறுதிக்குள் முடிவு செய்யப்படும். காங்கிரஸ் பொதுச்செயலாளர் எதிர்க்கட்சிகளை இணைக்கும் 14 பேர் கொண்ட குழு சேர்க்கப்பட்டார். 

தேர்தலில் பாரதம் ஒன்றுபடும் 'இந்தியா' வெல்லும் என்பதே முழக்கமாக இருக்கும். இந்தியா முன்னணியின் தொலைநோக்கு அறிக்கை காந்தி பிறந்த நாள் அக்டோபர் 2 ஆம் தேதி ராஜ்காட்டில் அறிவிக்கப்படும். 

5 முக்கிய நகரங்களில் வருகின்ற மாதம் பேரணி நடத்தப்படும். இதன் தொடர்ச்சியாக கூட்டணி நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடத்தப்படும் என பல்வேறு முடிவுகள் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

parliamentary elections India alliance candidates


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->