போலீசாருடன் காவல்நிலையத்தை வாடகைக்கு விடும் கேரள மாநில அரசு! வலுக்கும் கண்டனக்குரல்! - Seithipunal
Seithipunal


கேரளா காவல் துறை மாநிலத்தில் உள்ள காவல் நிலையங்களை வாடகைக்கு எடுக்கலாம் என அறிவித்துள்ளது. காவல் நிலையத்துடன் இன்ஸ்பெக்டர், மோப்பநாய், வயர்லெஸ் கருவிகள் போன்ற அனைத்தையும் கட்டணம் செலுத்தி வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. 

அதற்கு ஒவ்வொரு வசதிக்கான கட்டண பட்டியலையும் வெளியிட்டுள்ளது. காவல்துறை வெளியிட்டுள்ள பட்டியல் அடிப்படையில் காவல்துறை மோப்ப நாய்க்கு வாடகை அதிகமாக இருக்கிறது. 

அதற்கான காரணம் தெளிவாக தெரிவிக்கவில்லை. காவல்துறையின் இந்த முடிவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

அரசு அதிகாரிகளும் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அரசு நிதி நெருக்கடியை சரி செய்வதற்காக இந்த திட்டம் என கருத்து நிலவி வருகிறது.

இது நிதி நிலையை உயர்த்துவதற்கான திட்டம் இல்லை எனவும் ஏற்கனவே உள்ள பழைய திட்டம் எனவும் புதிய கட்டணங்களுக்கு தற்போது வெளிவந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

police station with police take over rent 


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->