பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு போலீஸ் காவல்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


பாலியல் வன்கொடுமை புகாரியின் அடிப்படையில் இன்று கைதான எம்பி பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு 6 நாட்கள் போலீஸ்காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக இருந்த புகாரின் அடிப்படையில் பிரஜ்வால் அவரது தந்தை ரேவண்ணா ஆகியோர் மீது கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இதனை தொடர்ந்து மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியிலிருந்து பிரஜ்வால் நீக்கப்பட்டார். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை கர்நாடகா அரசு அமைத்து விசாரணை மேற்கொண்டது. 

ஜெர்மனி, பெர்லின் என்ற இடத்தில் இருந்து பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்த ரேவண்ணாவை கர்நாடகா அரசின் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் இன்று காலை கைது செய்தனர். 

அதிகாரிகள் அவரின் கைப்பைகளை பறிமுதல் செய்து தனி காரில் கொண்டு சென்றனர். ரேவண்ணா வருகையை ஒட்டி பெங்களூரு விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

பின்னர் அவர் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்பட்டார். இதனை தொடர்ந்து நீதிபதி, பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு 6 நாட்கள் போலீஸ் காவல் விதித்து உத்தரவிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prajwal Revanna Police custody 


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->