நீட் தேர்வு முறைகேடு விவகாரம் - அடுத்தடுத்து கைதாகும் ஆசிரியர்கள்.! - Seithipunal
Seithipunal


நீட் தேர்வில் ஏராளமான முறைகேடுகள் நடந்தது தொடர்பாக சி.பி.ஐ. தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக சுமார் 6 வழக்குகள் பதிவு செய்துள்ள சி.பி.ஐ. அதிகாரிகள், குஜராத், ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

அதில், குஜராத்தில் பஞ்ச்மகால் மாவட்டத்தின் கோத்ராவில் இயங்கி வரும் ஜெய் ஜலராம் பள்ளி என்ற தனியார் பள்ளியில் அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர். பின்னர் அந்த பள்ளியின் உரிமையாளர் தீக்ஷித் படேல் என்பவரிடமும் விசாரணை நடத்தினர்.

இவர் நீட் தேர்வில் வெற்றி பெற வைப்பதாக கூறி தனது பள்ளியில் தேர்வு எழுதிய மாணவர்கள் சிலரிடம் ரூ.10 லட்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தியதுடன் நேற்று அதிகாலை அவரைக் கைது செய்தனர். 

இதைத் தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் அவரை ஆமதாபாத் கொண்டு சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனால், குஜராத்தில் நீட் மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.

நீட் முறைகேடு விவகாரத்தில் தனியார் பள்ளி உரிமையாளர் கைது செய்யப்பட்ட விவகாரம் குஜராத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் சிபிஐ அதிகாரிகள் மாநிலம் முழுவதும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

private school teacher arrested for neet exam malpractice issue in gujarat


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->