#BREAKING :: புதுச்சேரியில் பரபரப்பு.. அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் திடீர் கைது..!!
Puducherry AIADMK State Secretary Anbazhagan Arrested
புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த டிசம்பர் 24ஆம் தேதி புதுச்சேரி மாநில அதிமுக கழகச் செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களை சந்தித்தபோது மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சி அமைந்த போது மாநில வளர்ச்சி பாதிக்கப்படாமல் இருந்தது.
வெவ்வேறு கட்சிகள் மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் பொழுது மாநில வளர்ச்சி பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. துணைநிலை ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையே எதிர்மறையான கருத்து வேறுபாட்டால் மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கிறது. இதன் காரணமாக புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். எனவே புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி டிச.28ம்(இன்று) தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என விரும்புபவர்கள் ஒத்துழைப்பு அளிக்கலாம்" என பேட்டி அளித்திருந்தார்.
இந்த நிலையில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என திமுக சார்பில் காவல்துறையில் மனு அளிக்கப்பட்டது. புதுச்சேரி அதிமுக சார்பில் முழு அழைப்பு போராட்டம் இன்று நடக்க உள்ள நிலையில் அதிகாலை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எனக் கூறி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கைது செய்யப்பட்டுள்ளார். பாஜக கூட்டணியில் அதிமுக இருந்து வரும் நிலையில் திமுகவினரின் புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டது புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
English Summary
Puducherry AIADMK State Secretary Anbazhagan Arrested