எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்கள் கைது! இலங்கை கடற்படை நடவடிக்கை.! - Seithipunal
Seithipunal


எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டையைச் சேர்ந்த மூன்று மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் விசைப் படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து சுமார் 102 படகுகளில் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்களில் விஸ்வலிங்கம், சக்திவேல் மற்றும் கலைமாறன் ஆகியோர் சர்வதேச கடல் எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அவர்கள் மூவரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட மூவரும் காங்கேசன்துறை கடற்படை தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த கைது சம்பவம் மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் இத்தகைய நடவடிக்கைகளை தடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதத்திற்கு பிறகு தமிழக மீனவர்கள் 87 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு 42 பேர் விடுதலை செய்யப்பட்டும், 45 பேர் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pudukottai fishermen arrested


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->