தனியார் பள்ளி மாணவர்கள் சைக்கோ போன்று தான் இருப்பார்கள் - பரபரப்பை கிளப்பிய புதுவை சபாநாயகர்.!
puthuchery assembly speaker embalam selvam speech controversy
புதுச்சேரி சபாநாயகர் செல்வம் தனியார் பள்ளிகளின் பாடத்திட்டத்தின் காரணமாக மாணவர்கள் சைக்கோ போன்றுதான் இருப்பார்கள் என்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி பல்கலைக் கழக ஆடிட்டோரியத்தில் AoH (Academic of Hypnosis) மற்றும் InSPA (Indian School Pysichology Association) இணைந்து இரண்டு நாள் சர்வதேச மாநாட்டை நடத்தியது. இந்த மாநாட்டில் மத்திய இணையமைச்சர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது, புதுச்சேரி மாநிலத்தின் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:- "தனியார் பள்ளி மாணவர்களின் மனநிலையே வித்தியாசமாக தான் இருக்கும். தனியார் பள்ளிகளின் பாடத்திட்டத்தின் காரணமாக மாணவர்கள் சைக்கோ போன்றுதான் இருப்பார்கள்.
ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே 10ம் வகுப்பு பாடத்திட்டத்தை முடித்துவிடுவார்கள். 11ம் வகுப்பு படிக்கும்போதே 12ம் வகுப்பு பாடத்திட்டத்தை முடித்துவிடுவார்கள். அந்த 2 ஆண்டுகளில் மாணவர்களின் மனநிலையை மாற்றிவிடுகின்றனர்.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் திறன் குறைவாக இருந்தாலும், உடல் மற்றும் மன ரீதியாக எந்த பாதிப்பும் இருக்காது" என்றுத் தெரிவித்தார். சபாநாயகரின் இந்தக் கருத்து மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
puthuchery assembly speaker embalam selvam speech controversy