30 லட்சம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் - வாக்குறுதியை வாரி இறைக்கும் ராகுல்காந்தி.! - Seithipunal
Seithipunal


2024 மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரபூர்வத் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்தத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அதாவது தொகுதி பங்கீடு, கூட்டணி, வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு என்று தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-
* 30 லட்சம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்

▪️ 25 வயதுக்குட்பட்ட டிகிரி/டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஓராண்டுக்கு ₹1 லட்சம் உதவித் தொகையுடன் அப்ரண்டிஸ்ஷிப் பயிற்சி

▪️ வெளிப்படைத்தன்மையுடன் போட்டித்தேர்வுகள்  நடத்தவும், வினாத்தாள் கசிவதை தடுக்கவும் உயர் தரத்திலான புதிய சட்டங்கள் கொண்டுவரப்படும்

▪️ உணவு டெலிவரி உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு மேம்பட்ட வேலைச்சூழலை உறுதி செய்ய புதிய சட்டங்கள் கொண்டுவரப்படும்" என்றுத் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ragul gandhi election promise announce


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->