ராகுல் காந்தி பாதயாத்திரைக்கு எதிர்ப்பு - வீடியோவில் தெரிந்த கருப்புக் கொடி.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் கட்சிக்கு வலு சேர்க்கும் விதமாக, இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை என்ற பெயரில், அந்தக் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரண்டாம் கட்ட யாத்திரையை மேற்கொண்டுள்ளார். 

அதன் படி, யாத்திரையின் முப்பத்தெட்டாவது நாளான இன்று அவர் உத்தர பிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பர்சந்த்கஞ்ச் பகுதியில் இருந்து பயணம் மேற்கொண்டார். 

இதையடுத்து, ரேபரேலியில் திறந்த வாகனத்தில் சென்றபோது, கட்டிடத்தின் மேற்பகுதியில் நின்ற இருவர் கருப்புக்கொடிகளை காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. 

அந்த வீடியோவில் ராகுல் காந்தியின் பாதயாத்திரைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக கருப்புக் கொடி கட்டப்பட்டது தெரிந்துள்ளது. பின்னர் லக்னோவுக்கு புறப்பட்டு செல்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ragul gandhi padha yathirai in uttar pradesh


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->