ரத்தன் டாடாவின் அழகான காதல் கதை! நீங்களும் தெரிஞ்சிக்கோங்க... - Seithipunal
Seithipunal


இந்தியத் தொழிலதிபரான ரத்தன் டாடா, தனது தனித்துவ செயல்பாட்டின் மூலம் பெரும்பாலான மனிதர்களை கவர்ந்துள்ளார். அது அவரது தொழில் மற்றும் தொண்டு சார்ந்த பணிகள் என நபருக்கு நபர் மாறுபட்ட காரணத்தால் பலருக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறார்.

85 வயதான ரத்தன் டாடா, டாடா குழுமத்திற்கு சுமார் 21 ஆண்டுகள் தலைமை தாங்கியபோது அந்நிறுவனத்தின் வருவாயும், லாபமும் பல மடங்கு பெருகியது. இப்போது தனது முதலீடுகள் மூலம் அவர் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு ஊக்கம் அளித்து வருகிறார். 

அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற இந்த சூழலில் அவரது காதல் கதை தற்போது கவனம் பெற்றுள்ளது. ரத்தன் டாடா, தனது இளம் வயது காதல் கதையை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நேர்காணல் மூலம் பகிர்ந்தார்.  

அந்த காதல் திருமணம் வரை சென்று பின் அவருக்கு ஏன் கைகூடவில்லை என்பதை சினிமா பட பாணியில் பார்ப்போம். ரத்தன் டாடா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்தபோது தன் மனம் கவர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். 

இருவரும் காதலின் அடுத்தகட்டமான இல்வாழ்க்கையில் இணைந்து பயணிக்க விரும்பி, அவர்களது காதல் திருமணம் வரை சென்ற நிலையில், ரத்தன் பாட்டியை பக்கத்தில் இருந்து கவனித்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதால் இந்தியா சென்றுள்ளார்.

பின்னர் காதலியை திருமணம் செய்து, இந்தியாவிற்கு வந்து விடுவதாக அவர் திட்டமிட்டு அதற்கான பணிகளையும் அவர் முன்னெடுத்துள்ளார். ஆனால், அதற்கு அவரது காதலியின் பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர். 

அதற்கு காரணம் 1962-ல் ஏற்பட்ட இந்தியா - சீனா இடையிலான போர் தான் என தெரிய வந்தது. இதுநாள் வரையில் அவர் யாரை காதலித்தார் என்ற விவரத்தையும் பகிரவில்லை.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rattan Tata beautiful love story


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->