ரூ.2000 நோட்டு மாற்றம்.. வங்கிகளுக்கு வழிகாட்டுதல்கள் வெளியீடு - ரிசர்வ் வங்கி.! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்கு மேல் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் மே 23 ஆம் தேதியில் இருந்து செப்டம்பர் 30 ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து கணக்கில் வரவு வைத்துக்கொள்ளலாம். அல்லது வேறு ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம்.

தினமும் 20,000 ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கியில் மாற்றலாம். வங்கிகளில் செலுத்தப்படும் ரூ.2000 நோட்டுக்களை வங்கிகள் புழக்கத்தில் விடக்கூடாது என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி இருந்தது. இந்த நிலையில் 2000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்போர் அவற்றை தங்களது சொந்த வங்கி கணக்கில் செலுத்துவதற்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லை என்று வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். 

மேலும், எவ்வளவு வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம் என்றும் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து பிற நோட்டுகளை மாற்ற மட்டுமே கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு நாளைக்கு 10 நோட்டுகள் வீதம் 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே 2000 நோட்டுகளை கொடுத்து பிற நோட்டுகள் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவுறுத்தலின்படி, நாளை முதல் வங்கிகளில் தனி கவுண்டர் அமைக்கப்பட்டு 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றக்கூடிய வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும். 

கோடை காலம் என்ற காரணத்தால் வாடிக்கையாளர்களுக்கு தேவையான குடிநீர், நிழல் மற்றும் காத்திருப்பு அறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 2000 ரூபாய் நோட்டுகளை வழங்கும் நபர்களின் விவரங்களை கேட்டு அன்றாட தரவுகளை பராமரிக்க வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Reserve Bank about 2000 rs note Changing counter


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->