சோகம்... மின்னல் தாக்கி 7 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களாகவே வட மாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால், வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு உள்ளிட்டவை ஏற்படுகிறது. இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் மின்னல் தாக்கி ஏழு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பலோடா பஜார் மாவட்டத்தில் மோதரா கிராமத்தைச் சேர்ந்த சிலர் வயலில் வேலை செய்துவிட்டு வீட்டிற்குத் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது, திடீரென கனமழை பெய்யத் தொடங்கியது. உடனே அவர்கள் மழையில் இருந்து தப்பிப்பதற்காக அருகில் இருந்த மரத்தின்கீழ் ஒதுங்கினர். 

அப்போது அவர்கள் மீது மின்னல் தாக்கியதில், ஏழு பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் உயிரிழந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் முகேஷ், தங்கர், சந்தோஷ், தானேஷ்வர், பொக்ராஜ் விஷ்வகர்மா, தேவதாஸ், விஜய் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

seven peoples died and three peopls injured for lightning attack in chatisgarh


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->