6 மாதமாக சிறுமிக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!....தனித்தனியாக அழைத்து சென்று பலாத்காரம் செய்த 4 பேர் கைது! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா  மாநிலம், புனேயில் உள்ள கல்லூரி ஒன்றில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு  தொடர்பான கருத்தரங்கு கூட்டம் அண்மையில் நடைபெற்று உள்ளது.

அப்போது அந்த கருத்தரங்கில், மாணவி ஒருவர் மிகவும் சோகமாக இருந்து உள்ளார். இதையடுத்து மனநல ஆலோசகர்கள் அந்த மாணவியிடம் பேசியதில், மாணவியின் 16 வயது தோழி 4 வாலிபர்களால் கடந்த 6 மாதங்களாக கற்பழிக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. மேலும் அந்த 16 வயது சிறுமியிடம் சமூக வலைதளம் மூலம் 4 வாலிபர்கள் பேசி வந்து உள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தனித்தனியாக சிறுமியை பல இடங்களுக்கு அழைத்து சென்று  வாலிபர்கள் பலாத்காரம் செய்த  அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்துள்ளது.

மேலும் 4 வாலிபர்களும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் இல்லாதவர்கள் என்று கூறப்படும் நிலையில், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சமூகவலைதளம் மூலம் பழகி 16 வயது சிறுமியை கற்பழித்த 20, 22 வயதான 2 வாலிபர்களை கைது செய்தனர்.

மேலும் 18 வயதிற்கு கீழ் உள்ள இரண்டு சிறுவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shocking incident happened to the girl for 6 months 4 people who took her separately and raped her were arrested


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->