விநாயகர் சிலை மீது கல்வீச்சு! 33 பேர் கைது! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலம் சூரத் நகரில் விநாயகர் சிலை மீது கல் வீசப்பட்டதால் போராட்டம் நடந்தது. மேலும் போலீசார் போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. 

விநாயகர் சதுர்த்தி திருவிழா முன்னிட்டு, குஜராத் மாநிலம் சூரத் நகரில் அமைந்துள்ள சையத்புரா பகுதியில், பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டு அங்கு விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது. அந்த விநாயகர் சிலை மீது அப்பகுதியை சேர்ந்த 6 சிறுவர்கள் நேற்று கல் வீசி உள்ளனர்.

இந்த சம்பவத்துக்கு ஏராளமானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். பின்னர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டத்தை கலைத்தனர். இதனை தொடர்ந்து அந்த பகுதியில் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஸ் சங்கி சம்பவ இடத்தை பார்வையிட்டார். அவர் அளித்த பேட்டியில் கூறியது, ‘‘விநாயகர் சிலை மீது கல் வீசிய 6 பேரும், அவர்களை ஊக்குவித்ததாக 27 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இச்சம்பவத்தால் சூரத் நகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது’’ என்று கூறினார்.

இதன்படி,  கடந்த சனிக்கிழமை மத்தியப் பிரதேசம் ரத்லம் பகுதியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது இதேபோன்ற கல்வீச்சு சம்பவம் நடந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Stone pelting on Ganesha statue 33 people arrested


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->