ஓசூர் அருகே 6 வயது சிறுமியைக் கடித்துக் குதறிய தெருநாய்கள் - பதற வைத்த சிசிடிவி காட்சி.! - Seithipunal
Seithipunal


ஓசூர் அருகே 6 வயது சிறுமியைக் கடித்துக் குதறிய தெருநாய்கள் - பதற வைத்த சிசிடிவி காட்சி.!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் குடியிருப்பு பகுதிகள், தெருக்கள் மற்றும் சாலைகளில் தெரு நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிவதும், பொதுமக்களை விரட்டிச் சென்று கடிப்பதும் அதிகளவில் நடைபெறுகிறது.

இந்த நிலையில், ஓசூர் வாசவி நகரில் வசித்து வரும் கார்த்திக் - சுசீலா தம்பதியின் 6 வயது மகள் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது, அப்பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய்கள், சிறுமியை சுற்றி வளைத்து கடித்து குதறியுள்ளது.

அதில், அந்தச் சிறுமி வலித் தாங்கமுடியாமல் கதறி அழுதுள்ளார். இந்தச் சத்தம் கேட்டு குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, வருகிறது. இதற்கிடையே தெருநாய்களின் அட்டகாசத்தை தடுக்க ஓசூர் மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

street dogs bit six years old girl in osur


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->