வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி செய்த டெலிவரி பாய்! போலீசார் கைது செய்தனர்! - Seithipunal
Seithipunal


தெலங்கானா மாநிலத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி செய்த டெலிவரி பாய். போலீசார் கைது செய்து பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தெலங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண். ஒரு சில நாட்களில் இந்த பெண் ஆன்லைனில் சில பொருட்களை ஆர்டர் செய்து பெறுவது வழக்கமாம். இதனை தொடர்ந்து கடந்த வாரம் ஒரு பொருளை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். 

அதன்பேரில் நேற்று முன்தினம் டெலிவரி பாய் இவரது வீட்டிற்கு ஆர்டர் செய்த பொருளை கொண்டு வந்து கொடுத்துள்ளார். அப்போது அந்த வீட்டில் பெற்றோர் யாரும் இல்லாமல் இளம்பெண் மட்டும் தனியாக இருப்பதை பார்த்த அந்த டெலிவரி பாய், திடீரென வீட்டுக்குள் புகுந்து கதவை தாழ்ப்பாள் போட்டுள்ளார்.

இதனால் அச்சமடைந்த அந்த  இளம்பெண் சத்தம் போட்டுள்ளார். இருப்பினும் அந்த டெலிவரி பாய் இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி செய்ததாக தெரிகிறது. சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து கதவை தட்டினர். இதனால் அந்த வாலிபர் அக்கம் பக்கத்தினர் வந்ததை கண்டு பயந்து கதவை திறந்துகொண்டு அவரது இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பி ஓடிவிட்டார். 

இந்த சம்பவம் அந்த இளம்பெண் நேற்று முன்தினம் மஞ்சுளாபூர் ஊரக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை பார்வையிட்டனர். இந்த வீடியோவில் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டு தப்பி ஓடிய டெலிவரி பாய் விக்னேஷ்(23)  என்பது தெரியவந்தது. பின் போலீசார் அவரை கைது செய்த நிலையில் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The delivery boy who tried to rape the woman who was alone at home Police arrested


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->