நெல்லை வாலிபர் கொலை - போலீசாருக்கு செக் வைத்த சென்னை உயர்நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை மாவட்ட நீதிமன்றத்திற்கு நேற்று காலை கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டி என்பவர் ஒரு வழக்கு விசாரணையில் ஆஜராக வந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் மாயாண்டியை சரமாரியாக வெட்டியது. இதில் படுகாயமடைந்த மாயாண்டி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். 

இதைப்பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மாயாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நிலையில் ,இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் போலீசார் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதாவது, பாதுகாப்பபு பணியில் கவன குறைவாக இருந்த போலீசார் மீது விசாரணை நடத்த நெல்லை காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

chennai high court order action against police for nellai case


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->