திருப்பூர் | கஞ்சா வியாபாரி கொலை! 2 பேரிடம் போலீசார் விசாரணை! - Seithipunal
Seithipunal


திருப்பூர்: ராக்கியா பாளையம் ஜெய்நகர் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ தினேஷ் (வயது 30). இவர் நேற்று இரவு பத்மினிகார்டன் முதலாவது வீதியில் பிணமாக கிடந்துள்ளார். 

இது குறித்து, அருகில் இருந்தவர்கள் நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த தினேஷின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு  திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

இதில், அவரது உடலை கத்தியால் குத்தி, அரிவாளால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.இதையடுத்து, போலீசார் விசாரணை நடத்தியதில், தினேஷ் மீது கஞ்சா விற்பனை செய்த வழக்கு பதிவு செய்யப்பட்டு பலமுறை சிறை சென்றுள்ளதாக தெரிய வந்தது.  

தினேஷ் சிறையில் இருக்கும் போதே, இவருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் தகராறு இருந்ததாகவும் அது இப்போது முன்விரோதமாக மாறி உள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்தது.  

இந்நிலையில் நேற்று தினேஷிடம்,எதிர் தப்பினர் பிரச்சனை தொடர்பாக பேச வேண்டும் என அழைத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற தினேஷை மறு தப்பினர் அரிவாளால் வெட்டியும், குத்தியும் கொலை செய்துள்ளனர்.   

இந்த சம்பவம் தொடர்பாக,போலீசார் இரண்டு பேரை பிடித்து  விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் கொலைக்கான காரணம் குறித்து முழுவிவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

thiruppur kanja selar mardur issue


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->