ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர் -  3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை.!  - Seithipunal
Seithipunal


ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கிஷ்த்வார் மாவட்டத்தில் நயீத்காம் என்ற இடத்தில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி தாக்குதல் நடத்தினர். இதற்கு அவர்களும் பதிலடி கொடுத்து வந்தனர்.

இந்த துப்பாக்கி சண்டையில், பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்களில் முக்கிய தளபதியாக செயல்பட்ட சைபுல்லாவும் ஒருவர் ஆவார். நேற்று முன்தினம் முதல் நடந்த இந்த என்கவுன்டரில் நேற்று காலை சைபுல்லா மற்றும் மற்றொரு பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டனர். 

அவர்களிடம் இருந்து ஏ.கே. ரக துப்பாக்கி மற்றும் எம்.4 ரக துப்பாக்கி உள்பட பல்வேறு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த சம்பவம் குறித்த தகவலை ஜம்முவை அடிப்படையாக கொண்ட படையினர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளனர்.

இதேபோல், எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே வனப்பகுதியில் பெரிய ஆயுதங்களுடன் சென்ற பயங்கரவாதிகளை பார்த்த ராணுவ வீரர்கள் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், காயமடைந்த ராணுவ வீரர் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதன் காரணமாக, அந்த பகுதியில் கூடுதல் வீரர்கள் குவிக்கப்பட்டு தீவிர  தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

three terrorists encounter in jammu kashmir


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->