மதுபான கொள்கை வழக்கு - கெஜ்ரிவாலை கைது செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேட்டு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டனர். பின்னர் இருவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கை சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

கடந்த ஆண்டு நவம்பர் 6-ந்தேதி விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி அரசின் முன் அனுமதி பெறாமல் அரசு ஊழியர் ஒருவரை பணமோசடி வழக்கின் கீழ் கைது செய்ய முடியாது என்று தெரிவித்து இருந்தது. 

அதன் படி கெஜ்ரிவால், மீது வழக்கு தொடர அனுமதி கோரி, துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவுக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியிருந்தது. அந்தக் கடிதத்திற்கு அவரும் ஒப்புதல் அளித்து இருந்தார்.

இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் மீது பணமோசடி வழக்கு தொடர அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கியுள்ளது. டெல்லி சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

union home ministry order arrest kejriwal for delhi liquor case


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->