மேற்குவங்கம் : ஆம்புலன்ஸ் மோதி தாய், மகள் பலி.. ஆம்புலன்ஸ்க்கு தீ வைப்பு.! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்கத்தில் ஆம்புலன்ஸ் மோதி தாய், மகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்திலுள்ள கொல்கத்தா - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று பெண் ஒருவர் தனது 10 வயது மகளுடன் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார். 

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஆம்புலன்ஸ் ஒன்று திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த தாய், மகள் மீது பயங்கரமாக மோதியுள்ளது.

இந்த கொடூர விபத்தில் தாய் மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து காரணமாக அங்கு பெரும் திரளான கூட்டம் ஏற்பட்டது. 

அதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டி திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும், சில விபத்துக்கு காரணமான ஆம்புலன்சுக்கு தீ வைத்தனர். பெரும் போராட்டம் காரணமாக கொல்கத்தா சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 5 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து தடைப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

West Bengal ambulance accident mother and daughter death


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->