டெல்லியில் பரபரப்பு : நடுரோட்டில் பெண் சுட்டுக்கொலை.! - Seithipunal
Seithipunal


டெல்லியில் மர்ம நபர்களால் பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லி உத்யோக் நகர் பகுதியில் உள்ள இ-காமர்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர் ஜோதி (32). இவருக்கு திருமணமாகி கணவரும், மூன்று குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் ஜோதி வேலை முடிந்து ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தபோது, அவுட்டர் டெல்லியின் பஸ்சிம் விஹார் பகுதியில் உள்ள சாலையில் இரண்டு மர்ம நபர்களால் ஜோதியை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், பலத்த காயமடைந்த ஜோதியை மீட்டு சிகிச்சைக்காக சேகல் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஜோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பஸ்சிம் விஹார் மேற்கு காவல் நிலைய போலீசார், ஜோதியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்று அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman shot dead on road in Delhi


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->