வாந்தி எடுக்க தலையை வெளியில் நீட்டிய இளம்பெண் - ஆட்டோவிலிருந்து கீழே விழுந்து பலி.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டம் அருகே இலவும் தடத்தில் என்ற பகுதியை சேர்ந்தவர் சுல்பர் நிஜாஸ். இவருக்கு திடீரென ரத்த அழுத்தம் அதிகரித்து தலை சுற்றியதால், மருத்துவமனை செல்வதற்காக ஆட்டோவில் சென்றார்.

அப்போது, சுல்பர் நிஜாஸ் வாந்தி எடுப்பதற்காக, ஆட்டோவில் இருந்து தலையை வெளியே நீட்டியுள்ளார். அப்போது, அவர் திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு நெடுங்கண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், நிஜாஸ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக நெடுங்கண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

women died fell down from auto in kerala


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->