ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த வாலிபர்.! கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை.! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் சித்தூர் மாவட்டம் அம்பேத்கர் காலனி பகுதியை சேர்ந்தவர் ஜானகிராம் (30). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். மேலும் இவர் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு லட்சம் கணக்கில் பணத்தை இழந்துள்ளார்.

இதற்காக உறவினர்கள், நண்பர்கள் என பலரிடமும் கடன் வாங்கியும், ஆன்லைன் ஆப் மூலம் கடன் வாங்கியும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து கடன் கொடுத்தவர்கள் அனைவரும் ஜானகிராமுக்கு நெருக்கடி கொடுத்து கடனை திருப்பி கேட்டு மிரட்டி உள்ளனர்.

இதனால் மன உளைச்சலில் காணப்பட்ட ஜானகிராம் வாழ்க்கையில் வேறுபடைந்து நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் ஜானகிராமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது சட்டை பாக்கெட்டில் இருந்து போலீசார் ஒரு கடிதத்தை கைப்பற்றினர்.

அந்த கடிதத்தில் தன்னுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்றும், அம்மா, அண்ணா, அண்ணி என்னை மன்னித்து விடுங்கள் என்று கடிதம் எழுதி வைத்துள்ளார். இதைத்தொடர்ந்து இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Young man commits suicide for online gambling in Andhra


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->