சளி இருமலை போக்க நெஞ்செலும்பு சூப்.! - Seithipunal
Seithipunal


சளி, இருமல் உள்ளிட்டவற்றை உடனே போக்க ஆடு எலும்பில் சூப் வைப்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

தேவையான பொருட்கள்:-

சீரகம்
மிளகு
வரகொத்தமல்லி 
அரைத்த மசாலா தூள்
பூண்டு 
சின்ன வெங்காயம்
எண்ணெய்
பட்டை
கிராம்பு
சோம்பு
பிரியாணி இலை
ஆட்டு நெஞ்சு எலும்பு
தக்காளி
மஞ்சள் தூள்
கல் உப்பு
கறிவேப்பிலை
கொத்துமல்லி இலை 
தண்ணீர்

செய்முறை :–

முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் மிளகு, சீரகம், வர கொத்தமல்லி என்று அனைத்தையும் சேர்த்து பொடியாக அரைக்கவும்.
பின்னர் பூண்டை தோலுடனும், சின்ன வெங்காயத்தையும் நன்கு தட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதையடுத்து, ஒரு பிரஷர் குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, சோம்பு, பிரியாணி இலை மற்றும் நெஞ்சு எலும்பு கறியை போட்டு வதக்கி, அதில் தட்டிய பூண்டு மற்றும் சின்ன வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள், அரைத்த மசாலா, கல்லுப்பு மற்றும் கருவேப்பிலை சேர்க்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக்கொள்ள வேண்டும்.

குக்கரை மூடி மிதமான சூட்டில் பத்து விசில் வரும் வரை வேக வைத்து இறக்கி, அதில் நறுக்கிய கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலை இலைகளை சேர்த்தால் சூடான நெஞ்செலும்பு சூப் தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nenjelumbu bone soup recipe


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->