#JUSTIN || 17 ஐபிஎஸ் அதிகாரி மற்றம்., அதிரடி உத்தரவை பிறப்பித்த தமிழக அரசு.!
17 ips officers changed
17 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி,
போக்குவரத்து துணை ஆணையர் எம் குமார், காவல் தாம்பரம் காவல் ஆணையர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அம்பத்தூர் துணை ஆணையர் மகேஷ், ஆவடி சட்டம் ஒழுங்கு காவல்துறை ஆணையராக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல் சென்னை அடையாறு காவல் துணை ஆணையராக மகேந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், தாம்பரம் சட்ட ஒழுங்கு துணை ஆணையராக சிபி சக்கரவர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். தாம்பரம் காவல் தலைமையகம் மற்றும் நிர்வாகப் பிரிவு துணை ஆணையராக மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
இது மட்டுமில்லாமல் ஆவடி காவல் தலைமையகம் மற்றும் நிர்வாக பிரிவு துணை ஆணையராக உமையாள் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், பரங்கிமலை காவல்துறை ஆணையராக பிரதீப் நியமிக்கப்பட்டுள்ளார். அண்ணாநகர் துணை ஆணையராக சிவபிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுக்குள்ளது.