அதிமுகவில் மீண்டும் இணைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் - எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு!  - Seithipunal
Seithipunal


RSS பேரணியை தொடங்கிவைத்ததால் மறுதினம் அதிமுக கன்னியாகுமரி மாவட்ட கிழக்கு மாவட்ட செயலாளர், அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்ட தளவாய் சுந்தரம், 40 நாட்களில் தற்போது மீண்டும் அவருக்கு அதே பொறுப்புகள் வழங்கி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

இதுகுறித்த அந்த அறிவிப்பில், "முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினருமான திரு. என். தளவாய்சுந்தரம் அவர்கள், கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட காரணத்தால், அதுசம்பந்தமாக உரிய விளக்கம் கேட்டு, 8.10.2024 அன்று அவர் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்பட்டார்.

தளவாய்சுந்தரம் அவர்கள், அந்நிகழ்வில் கலந்துகொண்டது சம்பந்தமாக வருத்தம் தெரிவித்து தலைமைக்கு விளக்கம் அளித்துள்ளார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலும் என். தளவாய்சுந்தரம், B.Sc., B.L., M.L.A., அவர்கள் ( முன்னாள் அமைச்சர் ) இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.

கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன்" என்று எடப்பாடி K. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK EPS Kanyakumri Thalavai Sundram re joint


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->