அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றம்..!
ADMK head Office Re Open Today
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது.
சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11ம் தேதி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதிமுக அலுவலகத்திற்குள் கதவை உடைத்து தனது ஆதாரங்களுடன் ஒ பன்னீர்செல்வம் நுழைந்தார்.
இதையடுத்து, இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதால் வருவாய்த்துறை அதிகாரிகள் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். இது தொடர்பாக ராயப்பேட்டை காவல் துறையினர் 3 வழக்கு பதிவு செய்யப்பட்டு, 14 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை போது இரு தரப்பினர் இடையே காரசாரமாக வாதம் நடைபெற்றது. மேலும்,காவல்துறை தரப்பில் தற்போது வரை இரு தரப்பினரும் இடையே சமரசம் ஏற்படவில்லை. சீல் அகற்றினால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும். மேலும் பிரச்சினை ஏற்படலாம் என விளக்கம் அளிக்கப்பட்டது.
தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக இபிஎஸ், ஓபிஎஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி மனுவை ஏற்று சாவி அவரிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். ஒரு மாதத்திற்கு அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தொண்டர்கள் அனுமதிக்க கூடாது எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை, ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மயிலாப்பூர் புதிய வட்டாட்சியர் ஜெகஜீவன் ராம் சீலை அகற்றினார். அதிமுக அலுவலக மேலாளர் மகாலிங்கத்திடம் சாவி வழங்கப்பட்டது.
English Summary
ADMK head Office Re Open Today