விழுப்புரம் நீதிமன்றத்தில் சி.வி சண்முகம் ஆஜர்.!! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுக்கூட்டம் ஒன்றில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சரும் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினருமான சிவி சண்முகம் இன்று ஆஜராகி உள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே கடந்த ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் சி.வி சண்முகம் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் அவருடைய குடும்பத்தினரை அவதூறாக பேசியதாக திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இன்று சி.வி சண்முகம் ஆஜராகி உள்ளார். இதனால் நீதிமன்றத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

aiadmk CVe Shanmugam appears in Villupuram court


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->