#BREAKING || எடப்பாடி கையில் சாவி., அடுத்த கட்ட முடிவு இதுதான்.., ஓபிஎஸ் தரப்பு பேட்டி.!
AIADMK Head Office case order OPS next plan
அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதை அகற்றக் கோரி, ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு கடந்த 15 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டதால் மட்டுமே சீல் வைக்கப்பட்டது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஓபிஎஸ், இபிஎஸ் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்து உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில், அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிரான வழக்குகளில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமியின் மனுவை ஏற்றுகொண்டு, அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை அவரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது.
இதனை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கொண்டாடி வரும் நிலையில், அலுவலக உரிமை தொடர்பாக ஆராயாமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று, ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் திருமாறன் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆர்.டி.ஓ உத்தரவை நேரடியாக ரத்து செய்தது தவறு என்றும், உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியும் என்றும் வழக்கறிஞர் திருமாறன் தெரிவித்துள்ளார்.
English Summary
AIADMK Head Office case order OPS next plan