"எனக்கு ரொம்ப வருத்தம்பா".. மோடி விழாவை புறக்கணிக்கும் திமுக அமைச்சர்.!! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக தமிழகம் வந்த நிலையில் நேற்று திருப்பூரில் நடைபெற்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட என் மனம் என் மக்கள் நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்றார். 

இதனைத் தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக தூத்துக்குடி செல்லும் பிரதமர் நரேந்திர மோடி அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். 

இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் பலர் கலந்து கொள்ளும் நிலையில் தமிழக அரசு சார்பில் அமைச்சர் எ.வா வேலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு முறையாக அழைப்பு விடுத்த படவில்லை என சர்ச்சை எழுந்த நிலையில் கடைசி நேரத்தில் அவர் பெயர் சேர்க்கப்பட்டது.

நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராஜகிருஷ்ணனுக்கு முறையாக அழைப்பு விடுக்கப்படாததால் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை அவர் புறக்கணிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தனது சொந்த தொகுதியில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு முறையாக அழைப்பு விடுக்கப்படவில்லை என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வருத்தத்தில் உள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Anitha radhakrishnan boycott Narendra Modi function


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->