ஊழல் வழக்கில் ஜாமின் பெற்றதை நிரபராதி என தீர்ப்பு பெற்றதைபோல் உணர்கிறார் அரவிந்த் கெஜ்ரிவார் - அமித்ஷா குற்றசாட்டு!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அந்த வகையில் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவும் ஏப்ரல் 26 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் மே 7ஆம் தேதி மூன்றாம் கட்டம் வாக்குப் பதிவும் நடைபெற்று முடிந்த நிலையில், நான்காம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவி நாளை நடைபெற உள்ள நிலையில் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

 அந்த வகையில் நேற்று தெலுங்கானாவில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமுல்ஷா பேசுகையில், மக்களவைத் தேர்தல் முடிவுகள் அடிப்படையில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியே தொடரும். மதுபான ஊழல் வழக்கில் இடைக்கால ஜாமீன் பெற்றதை அரவிந்த் கெஜ்ரிவால் நிரபராதி என தீர்ப்பு வழங்கப்பட்டதை போல் உணர்கிறார். இந்தியாவின் தென் மாநிலங்களில் அதிக இடதில் பாஜக வெல்லும் தெலுங்கானாவில் பத்துக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற தொகுதிகளில் பாஜக வெற்றி பெறுவது உறுதி. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பிரதமர் மோடியே இந்தியாவை வழிநடத்துவார் என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bail in corruption case is like an acquittal by Amit Shah


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->