பிரதமர் மோடியை அவமானப்படுத்திய CM ஸ்டாலின் - அண்ணாமலை பரபரப்பு பேட்டி!
BJP Annamalai Condemn to DMK Govt MK Stalin
தமிழகம் வந்த பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் அவமதித்து விட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, பிரதமர் நரேந்திர மோடியின் தமிழ்நாடு வருகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் புறக்கணித்ததைக் கடுமையாக விமர்சித்தார்.
அவரின் பேட்டியில் “பிரதமர் தில்லிக்குத் திரும்பாமலும், நேராக தமிழ்நாட்டுக்கு வந்து ரூ.8,300 கோடி மதிப்பிலான திட்டங்களை அறிவித்துள்ளார். இது, மாநில மக்களுக்காக அக்கறையுடன் எடுத்த நடவடிக்கை. இதுபோன்ற தருணத்தில், அவரை வரவேற்பது முதல்வரின் முக்கியப் பொறுப்பு.
ஆனால், அவர் ராமேசுவரத்தில் வெயில் அதிகம் என்பதற்காக ஊட்டிக்கு சென்றார். வெயிலைத் தவிர்க்க குளிர் நாடும் முயற்சி இது” என்றார்.
மேலும், அதிகாரத்தை கொண்டும், நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தையும் கருதி முதல்வர் தவறாமல் கலந்து கொண்டிருக்க வேண்டியது அவசியம் என தெரிவித்த அண்ணாமலை, “மாநில மக்களின் பணத்தில்தான் அரசு நிகழ்ச்சி நடக்கிறது. இது அரசியல்வாதிகளுக்கான மேடை அல்ல. அதனால் நான் பின்னணியில் இருந்தேன்” என்றார்.
மேலும், “நீட் தேர்வை ரத்து செய்வோம் எனச் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் நான்கு ஆண்டுகளில் என்ன செய்தார்கள்? என்றும் கேள்வி எழுப்பினார்.
English Summary
BJP Annamalai Condemn to DMK Govt MK Stalin