முக்கிய புள்ளி கைது! ஸ்டாலினின் கையாலாகாத்தனத்தை மறைக்க முடியாது - அண்ணாமலை ஆவேசம்!
BJP Chennai kabilan arrest Annamalai Condemn to MK Stalin
பாஜக வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் கபிலன் இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய புகாரில், பெரவள்ளூர் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கடந்த 1ஆம் தேதி, பெரவள்ளூரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில், முதல்வர் பற்றி அவதூறாக பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், இன்று காலையில், வியாசர்பாடியில் உள்ள கபிலனின் வீட்டிற்கு சென்று அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
![](https://img.seithipunal.com/media/kabilanjhsd-vscha.png)
இந்நிலையில், கபிலன் கைதுக்கு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில்,
"வடசென்னை மேற்கு பாஜக மாவட்டத் தலைவர் கபிலன் அவர்களைத் தமிழகக் காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியதற்காக அவரைக் கைது செய்திருப்பதாகத் தெரிகிறது. திமுக அரசின் இந்த பாசிசப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
![](https://img.seithipunal.com/media/annamalai-9h2rq.jpg)
தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, தினம் கொலைகளும், கொள்ளைகளும் அரங்கேறிக் கொண்டிருக்கையில், திமுக தனது அரசியலுக்குக் காவல்துறையைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. பொதுமக்கள் உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பு வழங்க இயலாத முதலமைச்சர், பாஜகவினரை முடக்குவதில் மட்டுமே குறியாக இருக்கிறார்.
இது போன்ற அடக்குமுறைகளால், திமுக அரசின் ஒட்டுமொத்த நிர்வாகத் தோல்வியையோ, முதலமைச்சர் ஸ்டாலினின் கையாலாகாத்தனத்தையோ மறைக்க முடியாது. பாஜகவினர் மீதான இதுபோன்ற அடக்குமுறைகளைக் கைவிட்டு, மாநில அரசின் அடிப்படைக் கடமையான சட்டம் ஒழுங்கைக் கவனியுங்கள் முதலமைச்சரே. சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது உங்கள் நிர்வாகம்" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
English Summary
BJP Chennai kabilan arrest Annamalai Condemn to MK Stalin