மாநிலங்களவையின் அவை முன்னவராக நியமிக்கப் பட்டார் ஜே. பி. நட்டா.! வாழ்த்து சொன்ன காங்கிரஸ்..!! - Seithipunal
Seithipunal


 

நாடாளுமன்றத்தில் மாநிலங்கவையின் அவை முன்னவராக பாஜகவின் பியூஷ் கோயல் இருந்தார். இந்நிலையில் சமீபத்தில்  நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவின் வடக்கு மும்பை தொகுதியில் பியூஷ் கோயல் போட்டியிட்டு வென்றுள்ளார்.

 

இதையடுத்து பியூஷ் கோயல் வகித்து வந்த மாநிலங்களவையின் அவை முன்னவர் பதவி பாஜகவின் ஜே. பி. நட்டாவிற்கு வழங்கப் பட்டுள்ளது. முன்னதாக ஜே. பி. நட்டா இமாச்சல பிரதேசத்தில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் தான் மாநிலங்கவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

இதையடுத்து தற்போது தொடர்ந்து 3ஆவது முறை பிரதமராக பதவியேற்றுள்ள பிரதமர் மோடியின் 3.0 அமைச்சரவையிலும் ஜே. பி. நட்டா இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அமைச்சரவையில் அவர் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக கடந்த 9ம் தேதி பிரதமர் மோடியுடன் பதவியேற்றார்.

 

இதையடுத்து பியூஷ் கோயல் இன்று மக்களவை உறுப்பினராக பதவி ஏற்றுள்ளதையடுத்து ஜே. பி. நட்டா மாநிலங்களவையின் அவை முன்னவராக நியமிக்கப் பட்டுள்ளார். இவருக்கு  வாழ்த்து தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், "மாநிலங்களவையின் அவை முன்னவர் ஜே. பி. நட்டாவுக்கு வாழ்த்துக்கள். பாஜக தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளது போல் அவை முன்னவர் இடமளித்தால் தான் எதிர்க் கட்சிகள் ஒத்துழைக்க முடியும் " என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Chief J P Nadda Appointed As Leader Of House In Rajya Sabha


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->