அமைச்சர் பொன்முடியை நீக்கி, கைது செய்து சிறையிலடைக்க உத்தரவிட வேண்டும் - CM ஸ்டாலினுக்கு பறந்த அவசர கோரிக்கை!
BJP Narayanan Thirupathy Condemn to DMK ponmudi MK Stalin
பெண்களை இழிவாக பேசிய பொன்முடி மீது இரு நாட்களுக்குள் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், சிறிதளவேனும் நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை இருந்தால் முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் அமைச்சர் பொன்முடியை நீக்குவதோடு, அவரை கைது செய்து சிறையிலடைக்க உத்தரவிட வேண்டும் என்று பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார்.
மேலும், அவர் தெரிவிக்கையில், தென்காசியில் ஒரு நபரின் தலையை துண்டித்து எட்டு கிலோமீட்டர் தள்ளி கொண்டு போய் தலையை வீசி எறிந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தின் சட்ட ஒழுங்கு சீர்கேட்டை இந்த சம்பவம் படம் பிடித்து காட்டுகிறது.
முன் விரோதம் காரணமாக இது நடந்திருந்தாலும், பயம், அச்சம் என்பதே சிறிதும் இல்லாது, தமிழகத்தில் படுகொலைகள் நடப்பது சர்வசாதாரணமாகி விட்டது. அரசு நிர்வாகம் முழுமையாக முடங்கிப் போயுள்ளது என்பதையே இது உணர்த்துகிறது. இதே நிலை நீடிப்பது தமிழகத்திற்கு நல்லதல்ல என்பதைதமிழக அரசு உணர வேண்டும்.
ஆனால், தமிழகத்தின் சட்ட ஒழுங்கு சீர்கேட்டை மறைக்க, அரசு நிர்வாகத்தின் இயலாமையை மறைக்க, மொழி விவகாரம், நிதி பங்கீடு , தொகுதி மறுவரையரை, மாநில உரிமைகள் என பல்வேறு பிரச்சினைகளை மக்கள் முன்வைத்து தூண்டி விட்டு மலிவு அரசியல் செய்கிறது திமுக அரசு. இந்த திராவிட மாடல் அரசு மறையும் நாள் வெகு விரைவில்" என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
English Summary
BJP Narayanan Thirupathy Condemn to DMK ponmudi MK Stalin