நிர்மலா சீத்தாராமன் மீது வழக்குப்பதிவு!....அதிர்ச்சியில் பாஜக தலைவர்கள்! - Seithipunal
Seithipunal


மக்களதிகார சங்கர்ஷ பரிஷத் எனும் ஜேஎஸ்பி அமைப்பை சேர்ந்த ஆதர்ஷ் என்பவர், கர்நாடக மாநிலம்,  பெங்களூரில் உள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  

அந்த வழக்கில் தேர்தல் பத்திர முறைகேடு தொடர்பாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அமலாக்கத்துறை, பாஜக தலைவர் ஜேபி நட்டா, கர்நாடகா பாஜக முன்னாள் தலைவர் நளின் குமார் கட்டீல், தற்போதைய பாஜக அம்மாநில தலைவர் விஜயேந்திரா உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், தேர்தல் பத்திரம் தொடர்பான புகார் தொடர்பாக நிர்மலா சீதாராமன் உள்பட மற்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த திலக் நகர் காவல்துறைக்கு உத்தரவிட்ட பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், மேலும் இந்த வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

இது பாஜக தலைவர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தேர்தல் பத்திர நடைமுறையை கொண்டு வந்தது மத்திய நிதி அமைச்சகம் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Case registered against Nirmala Sitharaman BJP leaders shocked


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->