ஏமாற்றி துணை முதலமைச்சரான உதயநிதி ஸ்டாலின்?...தமிழ்நாட்டில் ஆன்மிகமும், அரசியலும் நிச்சயம் கலக்கும்!...உதயநிதிக்கு தமிழிசை பதிலடி!
Cheating deputy chief minister udhayanidhi stalin spirituality and politics will definitely mix in tamil nadu tamilisai response to udhayanidhi
சென்னை ஆலந்தூரில் இன்று தமிழ்நாடு மாநில முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 'எக்ஸ்' தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளதாக தெரிவித்த அவர், அதில்,திருவண்ணாமலையில் கிரி'வலம் போகவில்லை, சரி'வலம் போனோம் என்று சொல்லியிருக்கிறார்.
எதுவாக இருந்தாலும் சரி, இடம் போய்க்கொண்டிருந்தவகள் இன்று வலம் போய்க்கொண்டிருக்கிறீர்கள் என்றும், அதுவே ஆன்மிகத்தின் மிகப்பெரிய வெற்றிதான் என்று கூறினார். தமிழ்நாட்டில் ஆன்மிகமும், அரசியலும் கலக்கவே கலக்காது என்று சொல்கிறார். நான் இன்று சவால் விடுகிறேன். தமிழ்நாட்டில் ஆன்மிகமும், அரசியலும் நிச்சயம் கலக்கும் என்று தெரிவித்தார்.
மேலும், என்னைப்பற்றி சொல்லும்போது, 'இவர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள்' என்று சொல்லும் அவர், நான் என் அப்பா தோளிலோ, தாத்தா தோளிலோ ஏறி வரவில்லை என்றும், நானாக தட்டுத் தடுமாறி, தடம் மாறாமல் மக்களை சந்தித்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.
எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் எங்கள் கொள்கை என்று கூறுகிறார். அது உண்மையென்றால், உதயநிதி ஸ்டாலின் இந்த வயதில் எப்படி துணை முதலமைச்சர் ஆனார் என்றும், எல்லோருக்கும் எல்லாம் என்றால் எல்லோரையும் நீங்கள் பரிசீலனை செய்திருக்க வேண்டுமே என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
English Summary
Cheating deputy chief minister udhayanidhi stalin spirituality and politics will definitely mix in tamil nadu tamilisai response to udhayanidhi