சிதம்பரம் அருகே பெண் எஸ்ஐ பலி! திருமணம் ஆன இரு மாதத்தில் பெரும் சோகம்! - Seithipunal
Seithipunal


சிதம்பரம் அருகே திருமணம் முடிந்து வெறும் இரண்டு மாதங்களிலேயே, பெண் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் அவரது கணவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே குமராட்சி காவல் நிலையத்தில் பெண் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் இளவரசி. இவருக்கும் கலைவேந்தன் என்பவருக்கும் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளவரசி மற்றும் கலைவேந்தன், சிதம்பரம் அருகே சித்தலைப்பாடி பகுதியில் நடந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். 

விபத்து குறித்து வெளியாகிய தகவலின்படி, எதிரே வந்த அரசு பேருந்து மற்றும் மற்றொரு இருசக்கர வாகனம், இவர்களின் வாகனத்தை மோதி விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. 

இருவரின் உடலும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மேலும், அண்ணாமலை நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

chidambaram kumaratchi lady si death in accident


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->